கடந்த இரண்டு வாரங்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கு இடையே நடந்த வந்த சமூக வலைத்தள போர் காரணமாக சிம்பு சமீபத்தில் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். யங் சூப்பர் ஸ்டார் என தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்ட சிம்பு, அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் தனது பெயர் கண்டுகொள்ளப்படவில்லை என்பதில் ஏகப்பட்ட வருத்தமாம்.
மேலும் தனது அபிமான நடிகரான அஜீத்துக்குத்தான் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த சிம்புவுக்கு, அந்த பட்டம் விஜய்க்கு கிடைத்ததால் பயங்கர ஏமாற்றம் அடைந்துள்ளார். இதனால் தனது ‘யங் சுப்பர் ஸ்டார்’ பட்டத்தை இழக்க முன்வந்துவிட்டாராம். அஜீத்துக்கு கிடைக்காத சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தேவையில்லை என்பதுதான் அந்த அதிரடி முடிவு.
அஜீத் எப்போது தனது பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொள்கிறாரோ அதன்பிறகுதான் தன்னுடைய பெயருக்கு பின்னாலும் பட்டம் வரும் என உறுதியாக இருக்கின்றாராம். விரைவில் வெளிவர இருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் எந்த பட்டமும் இல்லாமல் வெறுமனே சிம்பு என்று மட்டும் டைட்டிலில் போட இயக்குனர் பாண்டிராஜனிடம் கூறிவிட்டதாக தெரிகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.