shadow

simbu-all-praise-for-kolaveri-disappointed-with-fans

 

லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என தனக்கு தானே பட்டம் வைத்துக்கொண்ட சிம்பு, சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிப்பதே தனது கனவு என்று கூறிவந்தார். ஆனால் அவருடைய போக்கில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு இப்பொழுதெல்லாம் சினிமாவில் நடிக்கவே பிடிக்கவில்லை என்றும் விரைவில் சினிமாவை விட்டே விலகப்போகிறேன் என்றும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார். இதே கருத்தை சில மாதங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே.

சினிமாவில் போட்டி மற்றும் பொறாமைகள் அதிகமாக இருக்கின்றது என்றும், தன்னுடைய தற்போதைய மனநிலை போட்டி, பொறாமை ஆகியவற்றை தாண்டி ஒரு அமைதியான மனநிலையை தேடுகிறது என்றும் குறிப்பிட்ட அவர், தான் கூடியவிரைவில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இசை, இயக்கம், போன்ற துறைகளில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார்.

சிம்புவின் இந்த முடிவு அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  மேலும் சிம்புவுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு போடா போடி படம் ரிலீஸ் ஆனபிறகு வேறு படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. வாலு மற்றும் வேட்டை மன்னன் இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் நிலையில் இல்லை. இரண்டு வருட இடைவெளியில் ஒரு படமும் ரிலீஸ் ஆகாததால், சிம்பு பெரும் அப்செட்டில் உள்ளார் என்பது தெரிகிறது.

Leave a Reply