சிம்புவுடன் செளந்தர்யா மோதுவதாக ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்தி திட்டமிட்டு பரப்பியதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கோச்சடையான் இயக்குனரும், ரஜினியின் இளைய மகளுமான செளந்தர்யா, சிம்பு பாடுவதை தயவு செய்து நிறுத்திவிடு என்று கூறியிருந்தார். இந்த பேட்டி பல ஊடகங்களில் வெளிவந்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
கோச்சடையான் படத்தின் கிராபிக்ஸை சிம்பு குறை கூறியதால் அதற்கு பழிவாங்கவே செளந்தர்யா சிம்புவை விமர்சனம் செய்திருப்பதாக பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் உண்மையில் கோச்சடையான் திரைப்படம் செளந்தர்யா நினைத்தது போல சரியாக தியேட்டர்களில் ஓடவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை மஞ்சப்பை ரிலீஸ் ஆனதும் பெருவாரியான தியேட்டர்களில் கோச்சடையான் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டுவிட்டன.
இதனால் மக்களின் கவனத்தை கோச்சடையான் படத்தின்மீது திசைதிருப்ப செளந்தர்யா போட்ட நாடகம்தான் இந்த சிம்பு விமர்சனம் என்று கோலிவுட்டில் விபரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன., இது உண்மையா என்பதை சம்மந்தப்பட்ட சிம்பு அல்லது செளந்தர்யாதான் விளக்கம் அளிக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.