கற்பழிக்கப்பட்ட 4 பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்
இராக், மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் தங்களுக்கென ஒரு சட்டம் வைத்து ஒரு தனி அரசாங்கம் போல் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆட்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் நான்கு இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு கல்லால் அடித்து கொலை செய்யும் மரண தண்டனை வழங்கப்பட்டதாக ஈராக் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை அடுத்து ஈராக் நாட்டின் மொசூல் நகரில் நான்கு பெண்களையும் வரிசையாக நிற்க வைத்து அவர்கள் மீது கல்லால் அடித்து கொலை செய்யும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் பொதுத்திடலில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.,
இந்த தண்டனைக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமான மனிதத்தன்மையற்ற தண்டனை என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Chennai Today News: Sick ISIS thugs savagely rape four Iraqi women then STONE them to death for ‘committing adultery’
Leave a Reply
You must be logged in to post a comment.