மும்பையில் மிக ஆடம்பரமான வீடு ஒன்றை வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பண நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வங்கியில் அவர் வாங்கிய லோன் தொகையை செலுத்த முடியாமல் திண்டாடுவதாகவும், லோன் தொகைக்காக அவர் கொடுத்த காசோலைகள் திரும்பி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மும்பையில் தனியாக தங்கியிருந்த ஸ்ருதிஹாசன் ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்ட காரணத்தால், பாதுகாப்பான பகுதியில் ஆடம்பர வசதிகொண்ட் வீடு வாங்க முடிவு செய்தார். பலகோடி மதிப்புள்ள மும்பையின் முக்கிய இடத்தில் வீடு வாங்க தன்னிடம் இருக்கும் பணத்தோடு, வங்கியில் லோன் வாங்கி தனது கனவு வீட்டை வாங்கிவிட்டார்.
ஆனால் தற்போது வீட்டை வாங்க வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறாராம். லோன் தொகைக்காக ஸ்ருதிஹாசன் கொடுத்த காசோலைகள் அவரது அக்கவுண்டில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால்வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்தாலும், தன்னுடைய ஆடம்பர செலவு காரணமாக ஸ்ருதிஹாசன் தற்போது பண நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பணம் இல்லாமல் திரும்பி வந்த காசோலைக்குரிய பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் ஸ்ருதிஹாசன் பணத்தை கட்டவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக வங்கி வட்ட்டாரத்தில் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.