shadow

கவுதமிக்கும் எனக்கும் இதுதான் பிரச்சனை. ஸ்ருதிஹாசன் விளக்கம்

shruthiகடந்த சில நாட்களாக ‘சபாஷ் நாயுடு’ படத்தின் காஸ்ட்யூம் தேர்வு செய்வதில் காஸ்ட்யூம் டிசைனர் கவுதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே கருத்துவேறுபாடு என்றும் கவுதமியை இந்த படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஸ்ருதிஹாசன் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

எந்த காஸ்ட்யூமை செலக்ட் செய்தால் என்னுடைய கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று நானும் கவுதமியும் ஆலோசித்தோமே தவிர எங்களுக்குள் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. யார் சிறப்பாக காஸ்ட்யூமை தேர்வு செய்வது என்று எங்களுக்குள் போட்டிதானே தவிர பிரச்சனை வந்ததாக கூறுவது முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ஸ்ருதிஹாசனின் செய்தித்தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: “தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.

தன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது

இவ்வாறு ஸ்ருதிஹாசனின் செய்தித்தொடர்பாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply