shadow

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு. பெரும் பரபரப்பு


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட தமிழ் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முறைப்படி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் முத்துகிருஷ்ணனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

முத்துகிருஷ்ணன் உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நின்றபோது அவர் மீது செருப்பு வீச்சு நடந்ததாகவும் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தற்போது முத்துகிருஷ்ணன் உடல் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply