ரூ.160 கோடிக்கும் மேல் செலவு செய்து மிகவும் பிரமாண்டமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் ‘பாஹுபாலி. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ‘நான் ஈ புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படம் தயாரிக்கப்பட்டு வரும்போதே இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும், முதல் பாகத்தில் பெரும்பாலான காட்சிகளில் அனுஷ்கா இடம்பெறவில்லை என்றும், அவர் முழுக்க முழுக்க இரண்டாம் பாகத்தில்தான் வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
முதல் பாகத்தை பெருமளவு ஆக்கிரமிப்பு செய்திருப்பது பிரபாஸ் மற்றும் தமன்னாதான் என்று படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் கசிந்து வருகின்றது. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு கிடைத்திருப்பதே அனுஷ்காவிற்காகத்தான் என்றும், அவர் இல்லாத பாஹுபாலி’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெருமா? என்பது குறித்து பலர் தற்போது சந்தேகம் வெளீயிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்காவின் பங்கு என்ன என்பது குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.