shadow

கடந்த ஆண்டின் சோகமும், இந்த ஆண்டு தொடக்கத்தின் எழுச்சியும்….

கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம், வர்தா புயலால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் பாதிப்புகள், இந்தியாவின் முத்த பத்திரிகையாளர் சோ மரணம் என அடுத்தடுத்து துன்ப நிகழ்வுகளாக நடந்தது.

இந்நிலையில் புத்தாண்டு பிறந்து அனைவருக்கும் புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. புத்தாண்டுக்கு முந்தைய நாள் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு, நேற்று மு.க.ஸ்டாலின் திமுகவின் செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்டது, மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை விராட் கோஹ்லி பொறுப்பு ஏற்கவிருப்பது என்று இந்த வருடத்தின் ஆரம்பமே அபாரமாக உள்ளது.

இதேபோல் இனிவரும் நாட்களும் நல்ல நாட்களாக அமைய பிரார்த்தனை செய்வோமாக.

Leave a Reply