shadow

Lord_Shiva

இந்தியா முழுவதும் பக்தர்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான விரதத்துடன் கூடிய பண்டிகைகளில் ஒன்று. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் உள்ளன. அவற்றில் சிவராத்திரி அன்று, வழக்கமான நான்கு கால பூஜைகள் நடக்கும்.  இங்கு, இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள சில கோவில்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் என்னென்ன நடக்க உள்ளன என்பதை மட்டும் தந்திருக்கிறோம்.   இன்று, தல யாத்திரை மேற்கொள்வோர்க்கு இது பயன்படும் என, நம்புகிறோம்.

திருவல்லீஸ்வரர் கோவில் பாடி, அம்பத்துர்
மாலை 6:00 –  8:00: பரதநாட்டிய நிகழ்ச்சி,
இரவு 8:00 – 10:00: மங்கையர்க்கரசியின் ‘அருள்  கொடுக்கும் சிவன் ’ ஆன்மிக  சொற்பொழிவு, இரவு 10:00 – 12:00: சைவ  சித்தாந்தசொற்பொழிவு,
இரவு 12:00 – 2:00: பக்தி பாடல்கள், அதிகாலை  2:00 – 5:00: தமிழ் நெஞ்சன்குழுவினரின் பட்டிமன்றம்

திரிசூல நாதர் கோவில் திரிசூலம்
அம்பாளுக்கு தங்க கவசம் அணிவிப்பு, பூப்பந்தல்,
பூ அலங்காரம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

அர்த்தநாரீஸ்வரர் கோவில் நங்கநல்லுர்
அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம்,
காலை  7:மணிக்கு, ஏகதின லட்சார்ச்சனை,
பிற்பகல் 3: மணிக்கு, மஹன்யாச பூர்வ ஏகாதச  ருத்ரஜபம்

அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் கோவில்
ஆற்காடு சாலை,    வளசரவாக்கம்
மாலை, 6:00 மணி முதல், நாளை காலை, 6:00 மணி வரை  ஆலப்பாக்கம்,
சிவநாட்டியாலயா நடன பள்ளி மாணவியரின் மாபெரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
தொடர்புக்கு: 94444  07257

ராமநாதீஸ்வரர் கோவில், போரூர்   
இரவு, 7:00 மணி முதல், நாளை காலை, 8:00 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி
தொடர்புக்கு: 044 – 2482 9955

ஜம்புகேஸ்வரர் கோவில், கொரட்டூர்
மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை சொற்பொழிவு
தொடர்புக்கு:98940 74360

சென்னமல்லீஸ்வரர் கோவில், தேவராஜமுதலி தெரு, பாரிமுனை   
சிறப்பு ஆராதனை மற்றும் அன்னதானம்
தொடர்புக்கு:91764 04745

கச்சாலீஸ்வரர் கோவில், அரண்மனைக்காரன்  தெரு, மண்ணடி     
மாலை 4:00 மணிக்கு முதல்கால பூஜை துவக்கம்;
மாலையில் மண்டகப்படியில், சிவபார்வதி தரிசனம்
தொடர்புக்கு: 91762 85430

மல்லிகேஸ்வரர் கோவில், லிங்கி செட்டி தெரு, மண்ணடி
மாலை 4:00 மணிக்கு முதல்கால பூஜை துவக்கம்
தொடர்புக்கு: 91762 85430

ரவீஸ்வரர் கோவில், மூர்த்திங்கர் சாலை,  வியாசர்பாடி   
பகல் 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானம்,
மாலை 5:00 மணிக்கு ஹோமம் மற்றும் ருத்ரபாராயணம் தாடர்புக்கு: 94443 53445

ஏகாம்பரேஸ்வரர் கோவில், தங்கசாலை, பாரிமுனை
காலை 8:45 மணிக்கு யாகபூஜையுடன் விழா துவக்கம்,
நண்பகல், 12:00 மணிக்கு 1008  சங்காபிஷேகம்,
இரவு 7:00 மணிக்கு சோமாஸ்கந்தர் வெள்ளித்தேரில்  திருவீதியுலா

சோமநாத ஈஸ்வரர் கோவில்,சவுராஷ்டிரா நகர், எம்.கே.பி.நகர்
நள்ளிரவு 12:00 மணிக்கு நடைபெறும் கால பூஜையில்,
60 வகையான  மலர்களால் அபிஷேகம்
தொடர்புக்கு: 90942 84121

அருணாசலேஸ்வரர் – வரதராஜ பெருமாள் கோவில், சவுகார்பேட்டை
இரவு 8:00 –  நள்ளிரவு 1:00 மணி வரை வடமாநில குழுவினரின் பஜனை  தொடர்புக்கு:  94448 94438

காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு மண்ணடி
மாலை 6:00 மணிக்கு விழா துவக்கம்
தொடர்புக்கு: 044–2522 9624

ஆதீஸ்வரர் கோவில், மேற்கு நிழற்சாலை, எம்.கே.பி.நகர்
இன்று  மாலை 4:30 மணிக்கு விழா துவக்கம்
தொடர்புக்கு: 98400 77990

அகஸ்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்
மாலை, 5:00 மணி முதல் சொற்பொழிவு மற்றும் நாட்டியாஞ்சலி
தொடர்புக்கு: 044 – 2617 2326

ஏகாம்பரேஸ்வரர் கோவில், அமைந்தகரை
சொற்பொழிவு மாலை, 6:00 மணி முதல்    தொடர்புக்கு: 044 –2664 0243

பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்,    அயனாவரம்
மாலை, 6: மணி முதல்பரத நாட்டியம், பக்தி பாடல்கள், சொற்பொழிவு
தொடர்புக்கு:044 – 2628 3595

காசிவிஸ்வநாதர் கோவில், கொன்னுர் நெடுஞ்சாலை, அயனாவரம்
நான்கு கால பூஜை

கந்தழீஸ்வரர் கோவில், முருகன் கோவில் சாலை, குன்றத்துர்
ஏகதின லட்சார்ச்சனை, ஐந்து கால பூஜை

நாகேஸ்வரர் கோவில், குன்றத்துர்
நான்கு கால பூஜை,  தொடர்புக்கு:    98650 87826

திரிசூலநாதர் கோவில்,பல்லாவரம்
நான்கு கால பூஜை, தொடர்புக்கு:94447 64162

கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்
இரவு முழுவதும் நடனம், சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள்

காரணீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்
10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடுகள்

மல்லீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்
விலங்குகள் இறைவனை வழிபாடு செய்வது போல் கண்காட்சி

விருபாட்சீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்
சிவன் தலையில் இருந்து கங்கை நீர் பொழிவது போல்
செய்யப்பட்ட சிலை பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

வாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்,
காசியில் உள்ள பஞ்சலிங்கங்கள் பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளன

தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர்   
நள்ளிரவு 12:00 மணிக்கு 108 சங்காபிஷேகம்
தொடர்புக்கு:044 -– 2573 3703

ஆத்மலிங்கேஸ்வரர்  கோவில், திருவொற்றியூர், கார்கில் வெற்றி நகர்
ஐந்து கால பூஜைகள் – மகா  அபிஷேகம், சிறப்பு பூஜைகள்
தொடர்புக்கு:98843 74882

நாகலிங்கேஸ்வரர்  கோவில்,கத்திவாக்கம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்
ஐந்து கால பூஜைகள் –  இரவு 7:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகம், பஞ்சாமிர்தம்,தேன், கரும்புச்சாறு அபிஷேகம்
தொடர்புக்கு:98401 37310

திருவுடைநாதர் கோவில், பாரதியார் தெரு, மணலி   
நான்கு கால அபிஷேகங்கள்

மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்
மாலை 4: மணி முதல் இன்னிசை, கர்நாடக இசை, பரதநாட்டிய நிகழ்ச்சிகள்
நடத்தப்படுகின்றன. திருமுறை மண்டபத்தில் மாலை 4:30 மணி முதல்
திருமுறை இசை, தமிழறிஞர்களின் சமய சொற்பொழிவுகள் நடக்கின்றன.
இரவு 7மணி முதல் இரவு 10 மணிவரை வேதபாடசாலை, வேதபாராயணம்
தொடர்புக்கு: 044– 2442 2688

ஆதிபுரீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை
மாலை 6 மணி முதல் சிறப்பு வழிபாடுகள்
தொடர்புக்கு: 044 – 22436121

தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி
காலை 8:30 மணிக்கு மஹன்யாசம் பாராயண ஏகாதச ருத்ராபிஷேகம்.
இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை துவக்கம்
தொடர்புக்கு:044– 2243 6121

காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை
மாலை 5: மணி முதல் நாளை அதிகாலை வரை இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, பரதநாட்டிய நிகழ்ச்சிகள்.இரண்டாம் கால பூஜையில் ருத்ர பாராயணம்

ஆதி கைலாசநாதர் கோவில், ஜே.பி.எஸ்டேட், ஆவடி
மாலை 6:00 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் சகானா குழுவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி
தொடர்புக்கு:99520 15594

கைலாச நாதர் கோவில், மாதவரம்
மாலை 6:30 மணிக்கு துர்கா வெங்கடேஷ் நாமசங்கீர்த்தனம்,
இரவு முழுவதும் ஆன்மிக இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு
தொடர்புக்கு: 94444 32199

திருமூலநாதர் கோவில், காந்தி பிரதான சாலை, புழல்
இரவு முழுவதும் தேவார திருமுறை பாராயண நிகழ்ச்சிகள்
தொடர்புக்கு:98940 74360

செல்வ விநாயகர் கோவில்,மேற்கு தாம்பரம்
மாலை 5மணிக்கு மங்கள இசை, மாலை 6 மணிக்கு அபிநயா நடன பள்ளி மாணவியர்  பரதநாட்டியம், நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 5மணி வரை பஜனை

வினைதீர்த்த விநாயகர் கோவில்,    முடிச்சூர்சாலை
இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள்

கற்பக விநாயகர் கோவில், கிழக்கு தாம்பரம்
இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள்

தேனுபுரீஸ்வரர் கோவில்,மாடம்பாக்கம்
சிவ நாட்டியாலயா மாணவியர் பரதநாட்டியமும், பக்தி பாடல்களும் இரவு முழுவதும்

அக்னீஸ்வரர் கோவில், வேங்கடமங்கலம்
இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை,நான்கு கால பூஜைகள்

சோமநாதேஸ்வரர் கோயில்,கொளத்துர்
இரவு 7 மணி: அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோரின்
வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நாட்டியாஞ்சலி.
இரவு 9 மணி: தேவாரம், திருமுறைகள் முற்றோதல், நான்கு கால பூஜை

Leave a Reply