இயக்குனர் ஷங்கர் மிகவும் பிரமாண்டமாக எடுத்துக்கொண்டிருக்கும் படம் ‘ஐ’. இந்த படத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் தற்போது இந்த படத்தின் வில்லன் யார் என்ற சஸ்பென்ஸை ஷங்கர் அறிவித்துள்ளார்.
நடிகர்திலகம் சிவாஜியின் மூத்தமகன் ராம்குமார் தான் இந்த படத்தின் வில்லன். ‘அறுவடை நாள்’ என்ற ஓரே படத்தில் மட்டும்தான் ராம்குமார் இதுவரை நடித்துள்ளார். ஷங்கர் மிகவும் வேண்டி கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ராம்குமார்.
அனுபவம் இல்லாத ராம்குமார் எப்படி நடிப்பார் என படக்குழுவினர் ஆச்சரியமுடன் பார்த்துகொண்டிருக்கும்போது ஒரே ஷாட்டில் ஓகே செய்து அனைவரையும் அசத்தினார் ராம்குமார். இந்த பட ரிலீஸுக்கு பின்னர் கண்டிப்பாக வில்லனாக ராம்குமார் கோலிவுட்டில் ஒரு சுற்று வருவார் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.