இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைமை எடிட்டராக பணிபுரிந்த சேகர் குப்தா, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1977ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சாதாரண நிருபராக பணிக்கு சேர்ந்து அதன்பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். இடையில் சில ஆண்டுகள் வேறு நிறுவனத்தில் பணிபுரிந்த சேகர் குப்தா, மீண்டும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை எடிட்டராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் ராஜினாமாவிற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை.
இருப்பினும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போட்டி ஊடகமான ஒரு பத்திரிகையில் அவர் பணிக்கு சேரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தலைமை எடிட்டர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தனது சக ஊழியர்களுக்கு பிரிவு உபச்சாரம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.தனது தலைமையிலான இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை இதுவரை செம்மையாக வழிநடத்தி செல்ல ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் அவர் அந்த கடிதத்தின் மூலம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.