shadow

டெல்லியில் மரணம் அடைந்த மாணவர் சரத்பிரபு உடல் இன்று பிரேத பரிசோதனை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த திருப்பூர் மாணவன் சரத் பிரபு மர்மமான முறையில் நேற்று கழிவறையில் மரணமடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த மாணவன் சரத் பிரபு மரணம் குறித்து விசாரணை செய்த டெல்லி போலீசார், சரத்பிரபு தனக்கு தானே இன்சுலின் போட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறினர்

ஆனால் சரத் பிரபு தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு சரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை செய்யும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனையை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் சரத்பிரபுவின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply