shadow

shahrukhan and sangeethaபிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அசாருதீன் மனைவியுமான சங்கீதா பிஜ்லானியின் வேலைக்காரியை ஷாருக்கானின் டிரைவர் கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஷாருக்கான் டிரைவர் அதிரடியாக நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் நடிகர் ஷாருக்கான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஷாருக்கானின் டிரைவர் ராஜேந்திர கவுதம் என்பவர் நடிகை சங்கீதா பிஜ்லானியின் வேலைக்காரிக்கு ஷாருக்கானின் வீட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி மும்பையில் உள்ள ஒரு லாட்ஜில் கற்பழித்த்தாக அவர் மீது மும்பை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திர கவுதமை நேற்று போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில மும்பை ஊடகங்களில் சங்கீதா பிஜ்லானியை கற்பழித்த ஷாருக்கான் கைது என தவறாக செய்தி வந்ததாகவும், இதனால் ஷாருக்கான் கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பின்னர் வருத்தம் தெரிவித்துவிட்ட போதிலும், தன்னுடைய டிரைவரின் குற்றச்செயலால் தன்னுடைய பெயர் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் நுழைக்கப்பட்டதால் ஷாருக்கான் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply