shadow

dare2.preview-620x330நேற்றைய ஐ.,பி.எல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கொல்கத்தா அணியையும், அணியின் உரிமையாளர் ஷாருக்கானையும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

நேற்றைய போட்டி முடிவடைந்தது,. ஃபேஸ்புக்கில் மம்தா பானர்ஜி பாராட்டியதை அறிந்ததும், ஷாருக்கான் நேரடியாக மம்தாவின் வீட்டிற்கு சென்று வாழ்த்து பெற்றார். ஷாருக்கானை மனதார வாழ்த்திய மம்தா பானர்ஜி இறுதிப்போட்டியில் இதேபோல் விளையாடி கோப்பையை கைப்பற்றவும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பு மம்தா பானர்ஜி வீட்டில் இருபது நிமிடங்கள் நடந்ததாக முதல்வரின் அலுவலக குறிப்பு ஒன்று கூறியுள்ளது. மம்தா பானர்ஜியிடம் வாழ்த்து பெற்றதே கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சி கிடைத்ததாக ஷாருக்கான் கூறியுள்ளர்.

Leave a Reply