சென்னை மக்களுக்காக ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ நாயகன் கொடுத்த ரூ.1 கோடி
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் கோலிவுட் மற்றும் டோலிவுட் திரை நட்சத்திரங்கள் லட்சக்கணக்கில் நிவாரண நிதியாக வாரி வழங்கினர். அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களையும் லாரி லாரியாக அனுப்பி சோதனையில் இருந்த பொதுமக்களை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக ரூ.1 கோடி நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக இந்த தொகையை வழங்கிய ஷாருக்கான், தமிழக மக்கள் இந்த சோதனையில் இருந்து மீண்டெழ தான் இறைவனை பிரார்த்திப்பதாக வேண்டியுள்ளார்.
சென்னை மக்களுக்காக ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ நாயகன் தந்த இந்த தொகை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Leave a Reply
You must be logged in to post a comment.