தமிழ் இளைஞர்களின் ஒற்றுமை போராட்டம். கிரிக்கெட் வீரர் சேவாக் ஆச்சர்யம்
எந்த வித அரசியல் தலையீடும் இல்லாமல், ஒரு தலைவரை முன்னிறுத்தாமல், காசு வாங்காமல் தமிழ் உணர்வு என்ற ஒரே காரணத்திற்காக மூன்றாவது நாளாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு அளித்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் சேவாக், இந்த ஒற்றுமையான போராட்டம் குறித்து தனது டுவிட்டரில் ஆச்சரியப்பட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், ‘தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதி வழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம் என கூறியுள்ளார்.
தமிழக போராட்டத்தை தேசிய ஊடகங்கள் கண்டுகொள்ளாத நிலையில் சேவாக்கின் இந்த டுவீட் முக்கியத்துவமானதாக கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.