shadow

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவாரா சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில்கும்ப்ளே திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.  மீண்டும் ஒருமுறை பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் சாம்பியன்ஸ்டிராபி போட்டியில் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு பல உள்நாட்டு, வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் விண்ணப்பம் செய்திருந்தபோதிலும் இந்தியாவின் அதிரடி மன்னன் சேவாக் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சேவாக் திறமையானவர் மட்டுமின்றி ஜாலியானவர் என்பதும், வீரர்களுடன் அவருடைய உறவு நட்புறவு முறையில் இருக்கும் என்பதாலும் அவர் அடுத்த பயிற்சியாளராக தேர்வுசெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சேவாக்கை அடுத்து டாம் மூடியும் பயிற்சியாளர் போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply