shadow

cricketநேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்ட்யின் 9வது ஆட்டத்தில் ராயல் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

நேற்று அகமதாபாத் சர்தார் வல்லாபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முன்னணி பேட்ஸ்மேன் பின்ச் ரிட்டர்யட் ஹர்ட், மற்றும் பார்த்திவ் பட்டேல், சந்த், ரோஹித் சர்மா ஆகிய முன்னணி பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டுக்களை சொற்ப ரன்களுக்கு பறிகொடுத்தது ஆகியவை மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் போலார்டு மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் ஸ்கோரை 164க்கு கொண்டு சென்றனர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே எவ்வித டென்ஷனும் இன்றி நிதானமாக விளையாடி 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றாது. ரஹானே 46 ரன்களும், கேப்டன் ஸ்மித் 79 ரன்களும் எடுத்தனர். ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் மும்பை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இன்னும் புள்ளிக்கணக்கை தொடங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply