shadow

சசிகலா-இளவரசிக்கு தனி அறை. டிவி, கட்டில் உள்பட பல வசதிகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தற்போது பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

சசிகலா இதுவரை சாதாரண ஜெயிலில் எந்தவித சிறப்பு வசதிகளும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒருசில வசதிகளை சிறை நிர்வாகம் செய்து கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசிக்கு என தனி அறையை சிறை நிர்வாகம் வழங்கியுள்ளதாகவும், அந்த அறையில் டிவி, கட்டில், மின்விசிறி, செய்தித்தாள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply