shadow

7கடந்த வருடம் ஜுன் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் பொறுப்பை மீண்டும் அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி ஏற்றுக்கொண்டவுடன் பல அதிரடி நடவடிக்கை எடுத்தார். அவரது அதிரடியால் இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் 10 பேர் இதுவரை ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். நேற்று முன் தினம் மூத்த இன்போசிஸ் அதிகாரியான நித்தியானன்ந்தன் ராதாகிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்ததால், இன்போசிஸ் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நித்தியானந்தன் ராதாகிருஷ்ணன் நிறுவனத்தின் நான்காவது காலிறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட அன்றே ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றது. அவருக்கு பதிலாக  Parvatheesam Kanchinadam பணியமர்த்தப்பட்டிருப்பதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது.

Leave a Reply