செங்கோட்டையன் தமிழக முதல்வர் ஆவாரா? தினகரன் தரப்பு தீவிர முயற்சி
தமிழக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக வேறொருவரை முதல்வராக நியமனம் செய்ய வேண்டும் என்றே கோரிக்கை வைத்ததாக 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறினார்
அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக யாரை முதல்வராக தேர்வு செய்ய வலியுறுத்தினீர்கள் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலலித்த போது வழக்கறிஞர் செங்கோட்டையன் பெயரை கூறினர்
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால் செங்கோட்டையன் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாக தினகரன் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.