shadow

images (4)

தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2 கப் (நறுக்கியது)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மல்லி தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு… வரமிளகாய் – 2 மல்லி – 1 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் பூண்டு – 4

செய்முறை: முதலில் நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்துள்ளதை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

Leave a Reply