shadow

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகிய செரீனா

அமெரிக்காவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் நேற்று ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுடன் மோதவிருந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு செரீனா இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்தார்.

இதுபற்றி செரீனா கூறுகையில், “துரதிர்ஷ்டவசமாக என்னுடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இப்போதைய நிலையில் என்னால் விளையாடுவது என்பது மிகவும் கடினமானது. இதுபோன்று ஒருபோதும் காயம் ஏற்பட்டது கிடையாது. இதுபோன்ற வேதனையையும் அனுபவித்தது கிடையாது” என்றார்.

செரீனா விலகியதால் மரிய ஷரபோவா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டு உள்ளார். காலிறுதியில் முகுருசா அல்லது லேசியாவுடன் ஷரபோவா மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply