shadow

ரஜினி குறித்து பாரதிராஜா கூறியதில் தவறு இல்லை: சீமான்

கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என பாரதிராஜா நேற்று ஒரு அறிக்கையின் மூலம் கூறினார். இந்த அறிக்கைக்கு ரஜினி ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி நெட்டிசன்களிடம் இருந்து ஏராளமான கண்டனங்கள் எழுந்தன.

கடந்த வருடம் பாரதிராஜா திறந்த திரைப்பட பயிற்சிப்பள்ளிக்கு ரஜினியை அழைத்த போது அவர் கர்நாடக காவியின் தூதராக தெரியவில்லையா? என பலர் அவரை நோக்கி கேள்விக்கணைகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியை கர்நாடக காவியின் தூதுவர் என்று கூறியதில் தவறில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

திரைப்படங்களில் நடிக்கும் போது பிரச்சினை இல்லை என்றும் ஆனால் தமிழகத்தை ஆள நினைக்கும்போது தான் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய சீமான், தமிழினம் மீண்டும் அடிமைப்பட்டு கிடக்க முடியாது என்றும் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

Leave a Reply