shadow

seeman and opsதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்புக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத் தளபதி பிரபாகரனின் பிறந்த நாளை பொது நிகழ்ச்சியாக கொண்டாடவும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதி கோரப்பட்டதில் பல இடங்களில் காவல் துறை அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

இது, இந்திய அரசமைப்பு அளித்துள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். இந்திய அரசமைப்பு எமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தை தமிழக அரசு காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்னையில், தமிழக முதலமைச்சர் தலையிட்டு, கூட்டங்களுக்கு அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்

Leave a Reply