shadow

சீமான் அதிரடி கைது: 8 வழிச்சாலை குறித்து கருத்து கேட்டதாக தகவல்

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூமாங்காடு என்ற பகுதிக்கு சென்றார். அங்கு அவர் மக்களிடம் கருத்து கேட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சீமான் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 8வழிச்சாலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சீமான் கைதுக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சீமான் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார் என்பதும் தினமும் அவர் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply