நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் திடீரென கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 17ஆம் தேதி மதுரை மேலூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த சீமான், அங்குள்ள சோதனைச்சாவடியியில் பணிபுரிந்த ஊழியரை தாக்கியதாக செய்யப்பட்ட புகாரின் அடிப்படையின் சீமானை இன்று கைது செய்ததாக மதுரை போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை சென்னை வந்த மேலூர் டிஎஸ்பி மணிவண்ணன், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், ஆகியோர் சென்னை மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். தகவல் அறிந்ததும் சீமான் வீட்டு முன் நாம் தமிழர் தொண்டர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் மிது கொலை முயற்சி உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.