இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், நாளை டர்பனில் துவங்குகிறது.   இங்குள்ள ஆடுகளம் சுழர் பந்துவீச்சுக்கு  சற்று ஒத்துழைக்கும் என்பதால்,  இந்திய அணி சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட், கடைசி நேரத்தில் டிரா ஆனது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி நாளில் பவுலர்கள் ஏமாற்றியதால், வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டைவிட நேர்ந்தது.

தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரை டர்பனில் வரிசையாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்தது.இதனால் இந்த ஆடுகளத்தில் இந்திய அணி சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply