குஜராத்தில் 2வது மரணம் இந்தியாவில் 12வது? பெரும் பரபரப்பு
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் நுழைந்தது. இதனை அடுத்து ஒவ்வொரு மாநிலமாக பரவிவரும் இந்த வைரஸ் குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே ஒரு உயிரையும் பலி வாங்கிய நிலையில் தற்போது இன்னொரு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வயதான பெண் ஒருவர் சற்று முன்னர் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த பெண்ணின் மரணம் குஜராத்தின் இரண்டாவது கொரோனா நோயாளி மரணம் என்பதும் இந்தியாவில் 12வது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்பது ஒரு ஆறுதலான விஷயமாகும்
Leave a Reply
You must be logged in to post a comment.