shadow

vaiko and subramanian swamyதேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணியின் தலைமையையும் பிரதமரையும் விமர்சனம் செய்துவரும் ம.தி.மு.க.வை கூட்டணியில் இருந்து நீக்குமாறு பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டிய தேசிய பார்வைக்கு எதிராக ம.தி.மு.க. நடந்து கொள்கிறது. அந்த கட்சியின் தலைவர் வைகோ, தேசியத்துக்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.

எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்குமாறு கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் தமிழக பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளேன்.

மேலும், ம.தி.மு.க.வை நீக்குவதற்கு நோட்டீஸ் அனுப்பவும் கோரிக்கை விடுத்துள்ளேன்”

இவ்வாறு சுப்பிரமணியசுவாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply