shadow

ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் பெண்

லண்டன் மாநகர காவல்துறையின் தலைமையகமான ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் என்பது உலகின் நம்பர் ஒன் போலீஸ் துறையாக கருதப்படுகிறது. யாராலும் தீர்க்க முடியாத பல்வேறு வழக்குகளை ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தீர்த்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஸ்காட்லாந்து போலீசின் உயரதிகாரியாக இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்துள்ள நிலையில் தற்போது அந்த பதவிக்கு முதல்முறையாக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த பெண் போலீஸ் அதிகாரியின் பெயர் கிரெஸ்ஸிடா டிக். இவரது தலைமையின் கீழ் போலீஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 43,000 பேர் பணியாற்றவுள்ளனர்.

இதுகுறித்து லண்டன் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் கூறுகையில் “மாநகர போலீசார் குறித்து கிரெஸ்ஸிடாவுக்கு தெளிவான தொலைநோக்குப் பார்வை உள்ளது. இதனால் பல்வேறு சமூகத்தினருடன் இணைந்து அவர் சிறப்பாக பணியாற்ற முடியும்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.

கிரெஸ்ஸிடாவுடன் இணைந்து பணிபுரிய தான் ஆர்வமாக இருப்பதாகக் கூறும் லண்டன் மேயர் சாதிக் கான் ”இது லண்டன் வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு நாள்” எனவும் புகழ்ந்திருக்கிறார்.

188 வருட ஸ்காட்லாந்து யார்டு வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply