காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா: பரபரப்பு தகவல்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென போர்க்கொடி தூக்கிய நிலையில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜோதிராதித்ய சிந்தியா சந்தித்த நிலையில் அவர் சற்று முன்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்றும் கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸின் முக்கிய நபராக இருந்தேன் என்றும் தற்போது அதிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்றும் அமைச்சர் மற்றும் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply