shadow

schoolகடந்த சில நாட்களாக கோடை வெயில் மிகக்கடுமையாக உள்ளது. இதனால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்துள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்படுமா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை என்று இன்று பள்ளி கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும். கொளுத்தும் வெயிலால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இல்லை என்று அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளரின் அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் வரும் ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக பரவலாக கூறப்பட்டு வருகிறது.

Leave a Reply