shadow

பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப பலி

சென்னையிலிருந்து எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்த பள்ளி மாணவி அனாமிகா என்பவர் எர்ணாகுளம் ஓட்டல் ஒன்றில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டதால் பரிதாபமாக பலியானார்.

சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவி அனாமிகா. +1 படிக்கும் அனாமிகா, கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பெற்றோருடன் எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்தார்.

இந்நிலையில், எர்ணாகுளத்தில் தனது பெற்றோருடன் சுற்றுலா சென்ற மாணவி, அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டார். பிரியாணி சாப்பிட்டு சில மணி நேரம் கழித்து, மாணவிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், செம்மீன் பிரியாணி சாப்பிட்டதால் ஏற்பட்ட அழற்சியில் மாணவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply