shadow

eve teasingஈவ் டீஸிங் செய்த வாலிபர் ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் காவல்நிலையத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப்பட் என்ற கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஹங்கீத் சிங் என்ற வாலிபர் மாணவியை ஈட் டீஸிங் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் ஹங்கீத்சிங் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயாரானபோது, கடும் ஆத்திரத்தில் இருந்த மாணவி, காவல் நிலையத்தில், காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை சரமாரியாக தாக்கியதோடு, செருப்பாலும் அந்த வாலிபரை அடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் வைத்தார்.

மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்பாக வாலிபரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈவ் டீஸிங் செய்த வாலிபரை, மாணவி ஒருவர் காவலர் முன்னிலையிலேயே செருப்பால் அடித்த உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply