shadow

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம். சசிகலா புஷ்பா மனு தள்ளுபடி

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ புலன்விசாரணை செய்து மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரி ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதுதொடர்பான மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால் அந்த நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுவை விசாரணை செய்யும் அளவுக்கு இந்த மனுவில் முகாந்திரம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இதே காரணத்திற்காக தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பு தொடர்ந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது

Leave a Reply