shadow

Rajasthan-Royals-vs-Chennai-Super-Kings-Scorecard-IPL-2013

 

உச்சநீதிமன்றத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் சில அதிரடு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

BCCIயின் இடைக்கால தலைவராக கவாஸ்கர் அவர்களை சுப்ரீம் கோர்ட் இன்று நியமனம் செய்துள்ளது. மேலும்  7வது ஐ.பி.எல்  கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவும் அனுமதி அளித்துள்ளது.

7வது ஐ.பி.எல் போட்டியை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று அனுமதி கொடுத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், ஐ.பி.எல் இன் நிர்வாக பணிகளை போட்டி முடியும் வரை அதன் இடைக்கால தலைவர் சுனில் கவாஸ்கர் கவனிப்பார் என்றும், அவருக்கு உரிய ஊதியத்தை BCCI அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7வது ஐ.பி.எல் போட்டிகள் முடிந்தபின்னர் BCCI, தனது புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது.

Leave a Reply