கிடாரி’யை அடுத்து சசிகுமாரின் ‘அலப்பற’
சசிகுமார் நடித்து தயாரித்த ‘கிடாரி’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிகுமார் நடித்து தயாரிக்கவுள்ள அடுத்த குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சசிகுமாரின் இந்த புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்திற்கும் ‘கிடாரி’ படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன
இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் கோவை சரளா நடிக்கவுள்ளார். மேலும் சங்கிலிமுருகன், ரோஹினி மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு அலப்பற’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தாலும் இந்த தகவல் படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை
ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் டைட்டில், ஹீரோயின் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.