shadow

டிடிவி தினகரனுக்கு கேபினட் அந்தஸ்து பதவி

சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரனை ஒரே நாளில் கட்சியில் இணைத்து அதற்கு அடுத்த ஒருசில நிமிடத்தில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியை கொடுத்த பின்னர் சசிகலா சிறைக்கு சென்றார். சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கே அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட ஒரு பதவியையும் அளிக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக டிடிவி தினகரன் விரைவில் நியமனம் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டெல்லிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரனும் சென்று இருந்தார். முதல்வர் சென்னை திரும்பிய நிலையில், தினகரன் டெல்லியில் இருந்து திரும்பாமல் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி பதவிக்கான பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி என்றா பதவி கேபினட் அந்தஸ்து கொண்டது. இவர் டெல்லியில் தங்கியிருந்த தமிழகத்திற்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருப்பார். மேலும், தமிழகத்தின் தலைமை செயலகத்துக்கு சென்று, அரசு சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் பார்க்கும் அதிகாரமும் பெறுகிறார். இதைத் தான் சசிகலா தரப்பும் விரும்புகிறது. அரசு செயல்பாடுகள் என்ன, அரசின் முக்கிய நடவடிக்கைகள் தனது குடும்பத்திற்கு தெரிய வேண்டும் என்பதே சசிகலாவின் எண்ணம். இதற்காக இந்தப் பொறுப்பிற்கு தினகரன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பொறுப்பு கேபினட் அந்தஸ்து கொண்டது என்பதால் மாநில கவர்னர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தினகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கவர்னர் அனுமதி வழங்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தின் அரசு செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் வகையில் தனது குடும்பத்தினரின் பங்கு இருக்க வேண்டும் என்று சசிகலா விரும்புவதால் தினகரன் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply