shadow

அதிருப்தி அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த சசிகலா அதிரடி திட்டம்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் ராஜினாமா செய்ய போவதாகவும், புதிய முதல்வராக விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பொறுப்பு ஏற்கவுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அதிருப்தியை பெற்றுள்ள சசிகலா முதல்வர் பதவியை ஏற்றவுடன் பொதுமக்களை சமாதானப்படுத்த ‘ பூரண மதுவிலக்கு’ சட்டத்தில் முதல் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சசிகலா போட்டியிடுவதற்கு வசதியாக தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அனேகமாக அந்த தொகுதி உசிலம்பட்டி அல்லது ஆண்டிப்பட்டி தொகுதியாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply