ஜெ.நினைவிடத்தில் சசிகலா சபதம். கரகோஷம் செய்த கட்சிக்காரர்கள்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து கிளம்பினார். செல்லும் வழியில் அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஜெ சமாதி முன் கையால் ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார்.
சசிகலா சபதம் செய்ததும் சுற்றி நின்ற கட்சிக்காரர்கள் கரகோஷம் எழுப்பினர். சசிகலா மனதில் என்ன நினைத்து சபதம் செய்தார் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனாலும் சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என சசிகலா சபதம் ஏற்றதாக முன்னாள் அமைச்சரும், சசிகலா ஆதரவாளருமான கோகுல இந்திரா தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.