முன்றாம் நாளாக கூவத்தூர் செல்கிறார் சசிகலா
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் தனியார் சொகுசு விடுதியின் கடந்த சில நாட்களாக தங்கியிருந்து கூத்தடித்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேரில் சென்று பார்த்து வந்தார்.
எம்.எல்.ஏக்கள் அனைவரும் அணி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சென்று பார்த்த சசிகலா, இன்றும் கூவத்தூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஒருபக்கம் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்பிக்களின் ஆதரவு அதிகரித்து கொண்டே போகும் நிலையில் இன்னொரு பக்கம் தன்வசம் உள்ள எம்.எல்.ஏக்களை தக்க வைத்துக்கொள்ள சசிகலா கடுமையாக போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.