shadow

டிடிவி தினகரன் பதிலை நிராகரித்தது தேர்தல் ஆணையம். அதிர்ச்சியில் அதிமுக தலைமை

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த மனுவிற்கு விளக்கம் அளிக்குமாறு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இதற்கு சசிகலா தரப்பில் இருந்து அவரால் துணணப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தினகரன் சமீபத்தில் பதில் அனுப்பினார். ஆனா தினகரன் அனுப்பிய பதிலை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: ” கட்சியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவரே இந்த மனுவிற்கு பதிலளிக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட மனுவில் தினகரனின் பொறுப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. . தினகரன் அதிமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே இந்த கடிததை ஏற்க முடியாது.

சசிகலா கையெழுத்திட்ட கடித்தினை அவர் சார்பில் அங்கிகரிக்கப்பட்ட நபர் யாரேனும் கொடுக்கலாம். வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கையொப்பமிட்ட பதிலை அனுப்ப வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

சசிகலா சிறைக்கு செல்லும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் டிடிவி தினகரனை அவர் துணைப்பொதுச்செயலாளராக அறிவித்தார். ஆனால் இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் அனுப்பவில்லை என்பதால் தற்போது டிடிவி தினகரனின் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply