shadow

தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சசிகலாபுஷ்பாவுக்கு மிரட்டல்

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவினர்கள் ஒருசிலரே வாழ்த்துக்கள் கூறி வருவதால் இன்னும் ஒருசில நாட்களில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலா குடும்பத்தினர்களை கடந்த சில மாதங்களாக கடுமையாக எதிர்த்து வந்த அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தற்போது திடீரென தினகரனுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவு கொடுத்த சசிகலாபுஷ்பாவுக்கு தொலைபேசியில் மர்மநபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் அளித்துள்ளார்.

Leave a Reply