பிரதமர் மோடியுடன் சசிகலாபுஷ்பா சந்திப்பா? நெருக்கடியில் அதிமுக
தி.மு.க. எம்.பி., திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது அவரது கணவர், மகன் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் சசிகலாபுஷ்பா, பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நேரில் விளக்கமளிக்க பிரதமரிடம் அவர் அப்பாயிண்ட் கேட்டதாகவும், பிரதமர் மோடி தரப்பில் இருந்தும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சசிகலாபுஷ்பா, விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு அ.தி.மு.க.,விலிருந்து எழும் நெருக்கடி குறித்தும், இதனால் தனக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருவது குறித்தும் பிரதமரிடம் அவர் கூறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், டில்லி ஐகோர்ட் தனக்கு தேவையான பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருந்தும் போதிய பாதுகாப்பு இன்றி தாம் இருப்பதாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.