shadow

இனிமேல் சசிகலா இந்த கட்சிக்குத்தான் பொதுச்செயலாளர்: டிடிவி தினகரன் அறிவிப்பு

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த சசிகலா பின்னர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்ன சசிகலா-தினகரன் அணி என அதிமுகவின் ஒரு பிரிவு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அமைப்பை தொடங்கினார். இந்த கட்சிக்கு அவரே தலைவராக இருந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தினகரன் சற்றுமுன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சசிகலா, தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பெரிய பதவியில் நியமனம் செய்யப்படுவதால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும் குடும்ப கட்சியாக மாறிவருவதாக தொண்டர்களில் கூறி வருகின்றனர்.,

Leave a Reply