சொகுசு அறையில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டாரா சசிகலா?
கடந்த சில நாட்களாக சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு அறையில் சசிகலா தங்கியிருந்ததாக கூறபட்ட நிலையில் தற்போது அவர் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு சிறையில் தனி சமையல் அறை, தங்குவதற்கு தனி சொகுசு அறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜீ. ரூபா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா். இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலா சிறை வளாகத்தில் சாதாரண உடையில் உலாவருவது, அறையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு சலுகைகள் இணையதளங்களில் வெளியாயின. மேலும் சசிகலாவிற்காக பிரத்யேகமாக 5 அறைகளை ஒன்றாக இணைத்து அவருக்கு படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.
இக்காட்சிகள் வெளியானதை தொடர்ந்து சசிகலா அனுபவித்து வந்த அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டு சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.