shadow

sarathதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருந்தது என்பதை சற்று நேரத்திற்கு முன்னர் பார்த்தோம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளதால் நடிகர் சங்க உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்திருந்த நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று விஷால் அணியினர் சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுமீது இன்று காலை விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், இதுகுறித்து நடிகர் சங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவு காரணமாக அதிர்ச்சி அடைந்த சங்கத்தலைவர் சரத்குமார், இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேல்முறையீட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply