shadow

கிஷோர் குடும்பத்தினர்களுக்கு சரத்குமார், சிவகார்த்திகேயன் உதவி

kishoreபிரபல எடிட்டர் கிஷோர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன் தினம் சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டது.

தேசிய விருதை பெற்றபோதிலும் கிஷோரின் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சியாக இல்லை. காரணம் மகன் இறந்த பின்னர் கிடைத்த தேசிய விருது மற்றும் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை. விசாரணை’ படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கிஷோரின் நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும், கிஷோரின் குடும்பத்திற்கு இதுவரை எந்தவித உதவியும் செய்யவில்லையாம். அதுமட்டுமின்றி கிஷோர் இறந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கூட இல்லை என்று மிக வருத்தத்துடன் கிஷோரின் 76வயதான தந்தை மிகவும் மனம் நொந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கிஷோர் குடும்பத்தினர்களின் நிலையை கேள்விப்பட்ட சரத்குமார் ரூ.1 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.2 லட்சமும் உதவி செய்துள்ளனர். மேலும் சில திரை நட்சத்திரங்கள் உதவி செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பொழுதாவது தனுஷிடம் இருந்து ஏதாவது உதவி கிடைக்குமா? என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply